×

சி.20 நிறைவு மாநாட்டில் இந்திய தூதர் பேச்சு 108 ஆம்புலன்ஸ் மோதி ஐடி ஊழியர் படுகாயம்

 

அன்னூர்: கோவை கணபதி மாநகர் விநாயகர் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (51). இவரது மனைவி சித்ரா(46). இவர்களது மகன் ஹரி நவநீத் கிருஷ்ணன். இவர் கீரணத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தின் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அன்னூர் கைகாட்டி அருகே சொந்த வேலை காரணமாக வந்தவர் மீண்டும் கோவை செல்வதற்காக பேருந்து ஏறச்சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த 108 ஆம்புலன்ஸ் மோதி படுகாயம் அடைந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த அன்னூர் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த ஹரி நவநீத் கிருஷ்ணனை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சி.20 நிறைவு மாநாட்டில் இந்திய தூதர் பேச்சு 108 ஆம்புலன்ஸ் மோதி ஐடி ஊழியர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : C.20 ,Annur ,Senthilkumar ,Vinayakar Nagar ,Ganapati Mayor, Coimbatore ,Chitra ,conference ,Dinakaran ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...